புலிகள் ஊரில் நடந்த மாவீரர் தினம்!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26, போரில் உயிரிழந்த புலிகளுக்கு வீரவணக்கம் செய்யும் நாளான நவம்பர் 27 மாவீரர் தினம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கடைப்பிடிப்பது வழக்கம்.





இந்த ஆண்டு பிரபாகரனும்,புலிகளும் அடியோடு அழித்தொழிக்கப்-பட்டதாகக் கருதப்படும் நிலையில்,தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவாளர்களால் இந்த இரு தினங்களும் சிறப்பாகவே கடைப்பிடிக்கப்பட்டன.





கடந்த 26-ம்தேதி ஈரோடு, திருச்சி போன்ற இடங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைக் கிழித்தும், டிஜிட்டல் பேனர்களைச் சேதப்படுத்தியும் தங்களுடைய எதிர்ப்பை காங்கிரஸார் பதிவு செய்தனர். சேலம் போன்ற இடங்களில் காங்கிரஸாருக்கு இந்த சிரமத்தைத் தராமல் போலீஸாரே அந்த கிழிப்பு, உடைப்பு பணிகளைப் பார்த்துக் கொண்டனர்.



ஆனால், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் எந்த இடையூறுமின்றி வெகு சிறப்பாக பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடி மாவீரர் நாளை அஞ்சலி தினமாக கடைப்பிடித்து அசத்தியிருக்கிறது பெரியார் திராவிடர் கழகம்.



கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கொளத்தூர் பகுதியில் கும்பாரப்பட்டி என்ற சிறு கிராமத்தில் விடுதலைப்புலிகள் தங்கியிருந்து அங்கே ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆதரவுடன் இந்தப் போர்ப் பயிற்சி 84-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி நவம்பர் 86-ம் ஆண்டு வரை நடந்தது.



புலிகள் தங்கி போர்ப்பயிற்சி எடுத்ததால், அந்தக் கிராமத்தவர்கள் தங்கள் கிராமப் பெயரை புலியூர் என்று மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு புலியூர் எனப்படும் கும்பாரப்பட்டியில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற இருப்பதைக் கேள்விப்பட்டு நாமும் புலியூருக்கு விரைந்தோம்.



கொளத்தூரிலிருந்து சின்னதண்டா செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது புலியூர்.

27-ம்தேதி நாம் அங்கு சென்றபோது கிராமமே புதுப்பொலிவுடன் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் புலிகளின் இயக்க நிறங்களான மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் காகிதத் தோரணங்கள், கொடிகள்.



ஊர் பேருந்து நிலையத்தில், புலிகளால் கட்டித் தரப்பட்ட பயணிகள் நிழற்கூடம் ஒன்று காட்சியளித்தது.



ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சமயத்தில் கொந்தளித்த கொளத்தூர் காங்கிஸார், புலிகள் மீது கோபம் கொண்டு அந்த நிழற்கூடத்தை அப்போது அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த நிழற்கூடத்தைச் செப்பனிட்டு, புலிகளின் தளபதியாக அங்கு தங்கியிருந்த பொன்னம்மானின் பெயரை அதற்குச் சூட்டியிருக்கிறார்கள் மக்கள்.



புது வண்ணம் பூசப்பட்டிருந்த அந்த நிழற்கூடத்தின் முன்னால்தான் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நிழற்கூடத்துக்கு நேர் எதிரே புலிகள் பயிற்சி பெற்ற இடத்துக்குச் செல்லும் பிரிவுச் சாலையின் தொடக்கம் `புலியூர் பிரிவு' என்ற பெயர் சூட்டப்பட்டு, அதற்கான பெயர்ப்பலகை திறக்கப்பட தயாராக இருந்தது.



கறுப்பு உடையணிந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கு கூட்டம் கூட்டமாக தனி வாகனங்களில் வரத்தொடங்கினர். சுமார் நானூறுக்கும் அதிகமானோர் வந்து குவிந்தனர்.



பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுவிட்டதால், அவருடைய சகோதரர் பழனிசாமி இந்த ஆண்டு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். புலிகள் பயிற்சி பெற்ற காலத்தில் அவர்களுக்கு உதவிய முத்துசாமி என்பவர் புலியூர் பிரிவு பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.



அதன்பின் தமிழீழ மாவீரர்நாள் பேனருக்கு முன்பு பெரியார் திராவிடர் கழக இளைஞர்கள் இருவர் மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்க நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அமைதியாகக் கலைந்து சென்றனர்.



அங்கு ஒரு போலீஸ்காரர் கூட நம் கண்ணில் தட்டுப்படவில்லை. துளி அசம்பாவிதமோ, இடையூறோ இன்றி திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடந்து முடிந்தது.



முத்துசாமியிடம் பேசியபோது பல சுவையான தகவல்களைத் தந்தார் அவர்.

``புலிகள் இங்கே மூன்றாண்டு காலம் போர்ப் பயிற்சி மேற்கொண்ட காலத்தில் அவர்கள் பேசிய தூய தமிழால் கவரப்பட்டு இன்றும் எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் தூய தமிழில் பேசி வருகிறார்கள்.



புலிகள் இயக்க இளைஞர்கள் எங்களிடம் மிகுந்த மரியாதை உள்ளவர்களாக நடந்து கொண்டனர். புலிகளின் மருத்துவ முகாமே எங்கள் ஊர் மக்களுக்கான மருத்துவ முகாமாகவும் பயன்பட்டது. அவர்கள் பயன்படுத்திய ஜீப்பே எங்கள் மக்களின் போக்குவரத்து வாகனமாக உதவியது. நெருங்கிய உறவினர்களைப் போல எங்கள் நெஞ்சத்தில் பசங்கள் (புலிகளை இங்குள்ளவர்கள் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்) ஒட்டிக்கொண்டார்கள். புலிகள் இருந்த காலத்தில் திருட்டுப் பயமே இருக்கவில்லை.



மொத்தம் மூன்று குழுக்களாக அவர்கள் பயிற்சி எடுத்தார்கள். முதல் குழுவுக்குத் தலைமையேற்றுப் பயிற்சி தந்தவர் பொன்னம்மான். அவருடன் வந்திருந்த புலேந்திரன் ஈழப் போரில் உயிர் நீத்ததைக் கேள்விப்பட்டு எங்களது நெருங்கிய உறவினரை இழந்தது போல கதறியழுதோம்.



பொன்னம்மான் சாதாரணமாக தரையில்தான் பசங்களோடு பசங்களாகப் படுத்துறங்குவார். மூன்று முறை இந்தப் பயிற்சியை மேற்பார்வையிட வந்திருந்த புலிகள் தலைவர் தம்பி பிரபாகரனும்கூட தரையில்தான் படுத்துறங்கினார்.



அவர்கள் எங்கள் தலைவர் கொளத்தூர் மணியை `அண்ணன்' என்றே பாசத்துடன் அழைத்து வந்தனர்.

பயிற்சி முடித்து தாயகம் திரும்பிய அவர்களை கலங்கிய கண்கள், கனத்த இதயத்துடன் வழியனுப்பிவைத்தோம்'' என்ற முத்துசாமி, புலிகள் தங்கியிருந்து பயிற்சியெடுத்த வனப்பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்று காட்டினார். தற்போது வனத்துறை வசமிருக்கும் அந்தப் பகுதியில் புலிகள் கட்டியிருந்த ஒரு தண்ணீர்த் தொட்டியும், இரண்டு சிறு காவல்சுவர்களுமே அவர்களது நினைவைச் சொல்ல மிச்சமிருந்தன.



புலியூரில், மாவீரர் தின வீரவணக்க நிகழ்ச்சி நடந்த அதே நாளில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் `கரும்புலி மில்லர் நினைவரங்கம்' என்ற சிறிய ஹால் ஒன்றை கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன், ராமகிருஷ்ணன் மற்றும் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் ஆகியோர் திறந்து வைத்திருக்கிறார்கள்.



அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய கொளத்தூர் மணியிடம் பேசினோம். "புலியூர் பகுதி புலிகளின் வீரவரலாற்றில் இடம்பிடித்த ஒரு முக்கிய பகுதி. இங்கு 34 மாதங்களில் ஏறத்தாழ 2000 புலிகள் பயிற்சி பெற்ற போதிலும் ஒருதுளி அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை'' என்றார் கொளத்தூர் மணி.



நாம் அங்கிருந்து திரும்பும்போது மேட்டூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த பிரபாகரன் பிறந்தநாள், மாவீரர் நினைவு தின போஸ்டர்கள், கட்டப்பட்டிருந்த பேனர்களை அகற்றச் சொல்லி பெரியார் திராவிடர் இயக்கத்துப் பிரமுகர்களிடம் போலீஸார் தூதுவிட்டுக் கொண்டிருந்தனர்.



ஆனால் கடைசிவரை பெரியார் தி.க.வினர் அதற்கு அசைந்து கொடுக்கவேயில்லை.



படங்கள்: ஏ.ஏ.ராஜ்



- வை. கதிரவன்



நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்



கொளத்தூர்-புலியூர்- மாவீரர் தின நிழற்படங்கள்
மாவீரர்நாள் வீரவணக்க நிகழ்வு கொளத்தூர் @ Yahoo! Video
பொன்னம்மான் நிழற்குடை மாவீரர் விளக்கேற்றும் குழந்தைகள்,அருகில் தோழர்.மார்ட்டின்,தோழர்.தா.செ.பழனிசாமி மாவீரர் விளக்கேற்றும் மகளிர் அந்திகருக்கலில் மாவீரர்களுக்கு அஞ்சலி -1 அந்திகருக்கலில் மாவீரர்களுக்கு அஞ்சலி - தீபமேற்றும் கொளத்தூர் "பிரபாகரன்" கள். மக்கள் திரள் நம்பிக்கை சுடர்கள் சமாதான புறா பெயரில் நகரம். புதுவை-அரியாங்குப்பம் மில்லர் விளையாட்டரங்க திறப்பு விழா -நிழற்படங்கள். புதுவை-அரியாங்குப்பம் மில்லர் விளையாட்டரங்கினை திறந்துவைக்கும் தோழர்.கொளத்தூர்.மணி, அருகில் தோழர்.விடுதலை.ராசேந்திரன்,கோவை.ராமகிருஷ்ணன்,லோகு.அய்யப்பன்,பாமக சட்டமன்ற உறுப்பினர்.வேல்முருகன் மாவீரர்களுக்கு தீப அஞ்சலி புதுவை மாநிலத் தலைவர்.லோகு.அய்யப்பன் உரை தோழர்.கொளத்தூர்.மணி உரை

தமிழர் விடுதலை வரலாற்றில் நவம்பர்-26

தமிழீழ மண்ணில்,விதையாக விழுந்து தமிழீழமாக எழவிருக்கும் மாவீரர்களுக்கு வீரவணக்கம்!



1954-



வரலாறு, தமிழர் விடுதலைக்கு வல்வெட்டித்துறை.வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் போராயுத்தத்தை தந்த நாள்.



பிரபாகரன் -மாற்றானுக்கு மண்டியிடாத மாவீரம்!



நற்குடிபிறப்பான இவனே,இவன் மட்டுமே தமிழினத்தின் தனிப்பெரும் தலைவன்!



தமிழினத்திற்கு, காலத்தின் கொடையாக கரிகாலன் கிடைத்த தினம் : நவம்பர்-26
ஆயுத குவியலோடு வந்த உலக வல்லாதிக்கங்களாலேயே நெருங்கமுடியாத மணிமுடியை, தன் மழலை சிரிப்பை மட்டுமே காட்டி தொட்டு விளையாடும் தமிழ் குழந்தை .



1957-



உலக வரலாற்றில்,எந்த நாட்டு அரசியல் சாசனமும், தன் நாட்டுமக்களை இழிமக்களாக குறிப்பிட்டதில்லை.



அறிவியக்க தலைவர் பெரியார் இந்த வினைக்கான எதிர்வினையை மிக சரியாக ஆற்றினார்.



தமிழர்களை இழிவுபடுத்தும் அரசியல் சாசனத்தை எரிக்க பெரியார் தேர்ந்தெடுத்த நாள்: நவம்பர் -26



தமிழர் விடுதலை வரலாற்றில் நவம்பர்-26 மைல்கல்!



பெரியார் தி.க சென்னை பொதுக்கூட்டம்

சிறைக்குப் போகாத சிங்கம் அன்புராஜ்!

மானமிருந்தால் நம்ம நாட்டில் பாப்பாரகுஞ்சு இருக்குமா? இருந்துவிடமுடியமா? ஒரு பய,நம்ம முன்னாள் பூணூல போட்டுடு வருவானா?

(19/12/1973 -திராவிடர்கழகத் தலைவர்.தமிழர்தலைவர்.பெரியார் தனது 95-ஆம் வயதில்,மரணிப்பதற்கு 5நாட்களுக்கு முன்னதாக,இன இழிவு ஒழிய முழங்கிய மரணசாசனம்)




36 ஆண்டுகளுக்கு பிறகு......



நாம் கடவுள் இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை என்று பேசுவது மட்டும் முக்கியமல்ல; மற்றவர்களிடம் அன்பு காட்டவேண்டும், பாசம் காட்டவேண்டும்.

(5/11/2009 -தி.க தலைவர்.கி.வீரமணி முனங்கியது)




சோரமணி : கட்டுப்பாடு என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து,ஒழுங்கு நடவடிக்கையினால் வெளியேற்றப்பட்ட பின்பும்,இயக்கத்திற்கு புதுரத்தத்தை பாய்ச்சினால் உங்களுக்கு குதர்க்கப் பார்வை ஏன்?



சூரமணி : அப்படியானால் இத்தனை நாளும்,தி.க பென்சனர் அசோசியனாக தான் இருந்ததா? புதுரத்தம் பாய்ச்சியதில் தப்பில்லை! ஆனால்,உலகத்தலைவர்.பெரியாரின் இயக்கத்திற்கு குடும்பரத்தம் பாய்ச்சுவது தான் நெருடுகிறது.



சோரமணி : எங்கள் இயக்கத்தில் என்ன நடந்தால்...உங்களுக்கென்ன? ஏன் கட்சியை விட்டு நீக்கிய பிறகும் மூக்கை நுழைப்பதேன்?வேறு வேலையே கிடையாதா? உங்களுக்கு........



சூரமணி : ஏணடா, நாங்கள் என்ன கடலூர்.கிருஸ்ணமூர்த்தி-மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை குறித்தா பேசுகிறோம். அப்படி அறக்கட்டளைக்கு அன்புராஜை வாரிசாக்கினால் நாங்கள் ஏன் கேட்கப் போகிறோம்? இப்ப, விஜயகாந்த் ஆண்டாள்-அழகர் அறக்கட்டளைக்கு தனது மகனை தான் வாரிசாக்குவார். யாராவது கேட்கமுடியமா? சினிமாவில் பல்டி அடித்து அவர் சம்பாதித்துள்ளார். அவரது மகன் வருவார்....அவரது பேரனும் வருவார். விஜயகாந்தை விட பல்டி அடிப்பதில் கில்லாடியாயிற்றே உங்கள் தல வீரமணி! அவர் சினிமாவில் பல்டி அடித்தோ, அரசியலில் பல்டி அடித்தோ கட்சி நடத்தட்டும்...தனது மகனை தலைவராக்கட்டும்! பேரனை செயலாளராக்கட்டும்!! யார் கேட்டது?



வாரிசு அரசியலுக்கு பெரியாரியக்கம் என்ன சங்கரமடமா?என்பது தான் எங்கள் கேள்வி.



சோரமணி : தந்தைபெரியாரின் கொள்கைகளை வென்றெடுக்க வீரமணியை விட்டால் யார் இருக்கிறார்கள்?



சூரமணி : இந்த பழய ரெக்கார்ட மாத்துங்கடா, ஆங்கில நூல்கள்,சுயமுன்னேற்ற/ஆரோக்கிய நூல்களின் பகுதியை 'சுட்டு' வாழ்வியல் சிந்தனைகள் என்ற பெயரில் வீரமணி புத்தகம் எழுதி...அப்பாவி பெரியார் தொண்டர்களின் தலையில் கட்ட...அவர்களோ பெரியார் எழுத்துக்கள் எனும் அமிர்தம் இருக்க, வீரமணியின் சுட்ட எழுத்துக்கள் எனும் சர்பத் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.



அடேய், இதை எழுதவா விடுதலை ? விகடனில் எழுதலாமே!



வீரமணி, சுகபோகனந்தா,நித்யானந்த பரமஹம்சர் எனற அளவோடு நின்றால் பரவாயில்லை!



கணிணி கற்று கொள்ளுங்கள் என்பது ஒரு சிந்தனை முத்து. தனது குடும்பத் தொலைக்காட்சிகளுக்காக அரசு செலவில் தொலைக்காட்சி வழங்கும் அண்ணனின் இளவல் என்பதை நிருபிக்க,அன்புராஜின் நிறுவனத்தில் கணினி கற்றுக் கொள்ளுங்கள் என்றே நேரடியாகச் சொல்லவேண்டியதுதானே?



இது தான் பெரியார்கொள்கையை வென்றெடுப்பதா?

ஆனால்,இப்ப தான் புரிகிறது...நாங்கள் தந்தை பெரியார் என்று நாங்கள் முழங்குவதற்கும், தந்தை பெரியார் என்று வீரமணி முனங்குவதற்கும் உள்ள வேறுபாடு!



சோரமணி :அப்படி என்ன வித்தியாசம்? நாங்கள் சொல்வதற்கும் ? நீங்கள் சொல்வதற்கும்??



சூரமணி : பூச்சிகளாய்,புன்மைதேரைகளாய், சாதீய இழிவிலிருந்த தமிழினத்திற்கு தன்மானத்தை கற்றுத் தந்த இனமான ஏந்தல் அவரே என்பதால்....



இன்றும், இந்திய சேற்றில் உழலும் தமிழனுக்கு...1938 ஆம் ஆண்டே செப்டம்பர் 11 அன்று சென்னை கடற்கரையில், "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற வரலாற்றுப் பிரகடனத்தை தந்த கலங்கரை விளக்கம் - அவரே என்பதால் தந்தைபெரியார் என முழங்குகிறோம் நாங்கள்!




சோரமணி : அப்ப, வீரமணி சொல்வது எதற்காம்?



சூரமணி : தந்தை பெரியார்,தந்தை பெரியார் என்று சொல்லி....தாததா சொத்து, பேரனுக்கு என்று அன்புராஜை உட்கார வைக்கத் தான்...



சோரமணி :அன்புராஜீன் வருகையை பார்த்து பார்ப்பனர்கள் பயந்து விட்டார்கள் தெரியுமா?



சூரமணி : ஆமாண்டா, தஞ்சை பொதுக்குழுவில் அன்புராஜ் அடுத்த வாரிசாக அறிவிக்கபட்ட உடனே....சிதம்பரம்,திருவரங்கம்,கும்பகோணத்திலிருந்தெல்லாம் பாப்பார பசங்க எல்லாம் முட்டை முடிச்சோட கிளம்பி திருத்தணி பக்கத்தில,ஆந்திரா பார்டரில் குடிசை போட்டு உட்கார்ந்திருக்கான்....



செய்தி வந்தவுடனே,பார்ப்பன சேரிகளுக்கெல்லாம் இந்திய அரசு துணை ராணுவத்த காவல் போட்டுருக்கு...பாரு!
சிறைக்கே போகாத சிங்கம் அன்புராஜை பார்த்து பார்ப்பனர்கள் பயந்து நடுங்குகிறார்கள் என்ற செய்தியை விடுதலையில் படித்து..... அய்யா சொன்ன மாதிரி பின்பொறியால் தான் சிரிக்க முடிந்தது.



அதவிட, பெரிய சந்தேகம், விடுதலையின் ஆசிரியர் கடலூர்.(வீர)மணியா? கவுண்டமணியா? என்பது தான்..



சோரமணி : இயக்கத்தைப் பற்றி வெளியாட்கள் விமர்சிக்கத்தேவையில்லை.



சூரமணி : தகரத்திற்கு தங்கம் கொடுக்க நன்கொடை வாங்கும் போது மட்டும் நாங்க தமிழன்...அது எங்க வரலாற்று கடமை,பங்களிப்பு. லிபர்ட்டி கிரியேஷனுக்கு 95 லட்சம் அரசு தந்த பின்பும்....பெரியார் தொண்டர்கள் எங்கிருந்தாலும்..பெரியார் படத்திற்கு பங்களிப்பு தரணும்..... அதே லிபர்ட்டி கிரியேஷனுக்குள்ளேயும், அன்புராசு வந்து குதிச்சா...நாங்க கேள்வி கேடகக் கூடாது.



என்னடா உங்க கொள்கை தெளிவு ? இது தான் அறிவு நாணயத்தை மொத்த குத்தகைக்கு எடுத்த லட்சணமா?



ஏண்டா, கருப்பு சட்டை போட்டு நாத்திகம் பேசுற பெரியார் ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சராகணும் பேசினாரு?



பெரியாரிஸ்ட் எல்லாம் கோயிலுக்கா போறோம்? நாம ஏன் தமிழ் அர்ச்சனை கேட்கறோம்?



ஆத்திகத் தமிழனுக்கான இழிவை துடைக்கவும்...தமிழ் நாட்டு ஆலயங்களில்,வழிபாடு மொழியாக நம் த மிழே இருக்க வேண்டும் என்பதற்காக.....



பக்தி போதையில் இருக்கிற தமிழன், உங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கையிலையே? நீங்க ஏன் கோயில பற்றி பேசுறீங்க ? கேட்கிற மாதிரி கருப்புசட்டைய போட்டுக்கிட்டு முட்டாள்தனமா கேட்காதே!



தமிழ்நாட்டு கோயிலில் பார்ப்பன மனுநீதி!



பெரியார் திடலில் வீரமணியின் மனுநீதி !!



சோரமணி : இது ராணுவக் கட்டுபாடு மிக்க இயக்கம்!



சூரமணி : குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டியில், தோழர்.கொளத்தூர்.மணி சொன்னது போல, பொத்தனூர்.சண்முகம்,உரத்தநாடு குணசேகரன்,வழக்கறிஞர்.அருள்மொழி ஆகியோர் களப்பணிகளுக்கும்,பேச்சாளர்களாகவும் காலம் காலமாக பணியாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். பெரியார் தி.க தோழர்கள் மிகவும் மதிக்கும்,திராவிடபேரியக்கத்தின் கருத்துக் கருவூலம் அய்யா.கலிபூங்குன்றன் காலத்திற்கும் எழுதிகொண்டே இருக்க வேண்டும். ஆனால், வீரமணியும்,அவரது குடும்பவாரிசுகளும் மட்டுமே, தலைமை பதவிக்கு தகுதியானவர்கள். இதுவா ராணுவக் கட்டுபாடு?



பொதுக்குழு/செயற்குழு/வெங்காயகுழுகளை எல்லாம் தாண்டிக் குதித்து..."நான் ஆணையிட்டால்" என்று வீரமணி வீட்டுப் பிள்ளை குதித்திருக்கிறாரே!



"ராசுக்குட்டி" மாதிரி இருந்த அன்புராசு வரும்போது, அவரைவிட நிர்வாகத்திறனிலும்,களப்பணியிலும்,வாதங்களை எடுத்து வைப்பதிலும்,மேடை பேச்சிலும்,குறிப்பாக பெரியார்,திராவிட இயக்க கருத்தியலில் தெளிவான சிந்தனைக் கொண்ட பலர் மறைக்கப்படுவது ஏன்? என்பது பெரியார் தி.க தோழர்களின் கேள்வி அல்ல!



தி.கவிற்குள்ளேயேயும், பெரியார் கொள்கையோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கேள்வி!



குமுதம் ரிப்போர்ட்டர் குறிப்பிட்டது போல, இங்கேயும் வாரிசு அரசியல் வந்துவிட்டதே! என அங்கலாய்த்தவர்களின் கேள்வி!!



தஞ்சை பொதுக்குழுவிற்கு வந்து, சாப்பிடாமலே சென்று சுயமரியாதையை தக்க வைத்துக் கொண்டவர்களின் கேள்வி!!!



சோரமணி : என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்! எங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஆசிரியர்,ஆசிரியர்,ஆசிரியர் தான்....



சூரமணி : ஆனால், உங்கள் ஆசிரியருக்கு தெரிவது எல்லாம் பெரியார் தி.க தோழர்கள் கொளத்தூர்.மணியும், கோவை.இராமகிருஷ்ணனும் தான்.



சோரமணி : எப்பிடி?



சூரமணி : 5ந் தேதி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கணினி படிக்க வேண்டும்..என்றெல்லாம் கப்சா விட்டுக் கொண்டிருந்த கடலூராரின் கண்ணில்..."பாவம் போல" உட்கார்ந்திருந்த சிறப்பு அழைப்பாளர் அன்புராஜ் பட்டுவிட்டார். உடனே, வீரமணிக்கு ஜீ.வியில் தோழர்.கோவை.இராமகிருஷ்ணன் கேட்ட கேள்வியும்,குமுதம் ரிப்போர்ட்டரில்,தோழர்.கொளத்தூர்.மணி கேட்ட கேள்வியும் நினைவுக்கு வர....B.P எகிற,தத்துவமுத்துகளை கொட்டி திர்த்துவிட்டார்.



"சிறைக்குப் போனால்தான் தியாகமா? சிறைக்குப் போனால்தான் தியாகம் என்றால், சிறைக்குச் சென்ற அத்துணை கிரிமினல்களும் தியாகிகளா? அப்படிப்பட்டவர்கள்தான் பதவியைப் பெறத் தகுதி உள்ளவர்கள் என்று சொல்ல முடியுமா?" (விடுதலை 7/11/2009 பக்-4)



போராட்டகளங்களையே,திராவிடர் கழகத்தின் வரலாறாக்கிய பெரியாரின் இயக்கத்தின் தலிவரின் பேச்சு இது.



சோரமணி : ஒரு flow-ல பேசி இருப்பாரு? அதுக்குப் போயி..........திரிபுவாத திம்மன் என்பது எல்லாம் over...



சூரமணி :கருப்புச் சட்டைப் போட்டுக் கொண்டு சிந்திக்க மறுக்கும் உன்னை விட, பட்டைப் போட்டுக் கொண்டு சிந்திக்க மறுக்கும் ஆத்திகனே மேல்!

வடக்கின் வசந்தமும்,வீரமணியும்...

.........ஏப்ரல் 24 ஆம் தேதியன்று ,இலங்கைக்கு 100 கோடி ரூபாயை நிதி அளிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு முன்பாக நடந்த விவாதங்கள் அனைத்திலும் CIDC கலந்து கொண்டது.

போர் முடிந்த ஐந்தாவது நாளில் - மே 23 ஆம் தேதியன்று - இலங்கைக்கான 100 கோடி ரூபாய் நிதியானது 500 கோடியாக உயர்த்தப்படுகிறது என்று இந்திய அரசு அறிவித்தது. முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட இந்த நிதி குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் நடந்த விவாதங்களிலும் CIDC முக்கியப் பங்கை ஆற்றியது.

சர்வதேச நிதியத்திடம் இருந்து மார்ச் மாதத்தின்போது இலங்கை அரசு கேட்டிருந்த 190 கோடி டாலர் நிதி உதவியை உடனடியாக வழங்க விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மேற்குலக நாடுகளின் அரசுகள் ஜூன் மாதம் தொட்டு ஈடுபடத் தொடங்கின.

இந்தத் தடையை நீக்கிக் கொடுத்தால் வன்னிப் பகுதியின் மீள் உருவாக்கத்தில் கலந்துகொள்ள இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதாக மன்மோகன் சிங் அரசிடம் ராஜபக்சா அரசு உறுதி அளித்தது.ஜூன் இறுதியில் இருந்தே இதற்கான முயற்சியில் இறங்கிய மன்மோகன் அரசின் அழுத்தங்களுக்கு மேற்குலக அரசுகள் ஜூலை இரண்டாவது வாரம் வழி விட்டன. ஜூலை 15 ஆம் தேதியன்று எகிப்தில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் அங்கு ராஜபக்சாவை சந்தித்தார்.

சர்வதேச நிதியத்தின் கடன் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அளிக்கப்படும் என்ற செய்தியை அவர் தெரிவித்தார். அந்த செய்தி வெளியான அன்றே வன்னிப் பகுதியின் மீள் உருவாக்கத்தில் இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக ராஜபக்சா உறுதி கூறினார்.

ஜூலை 22 ஆம் தேதியன்று சர்வதேச நிதியத்தின் கடனுக்கான அனுமதி அறிவிக்கப்பட்டபோது, CIDC யும் இலங்கையின் கட்டுமான அமைச்சகமும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் உள்ள கட்டுமானத் திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்வதற்கான அனுமதியைக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன.........

நன்றி : http://tamilthavi.blogspot.com/2009/09/blog-post_2642.html
CIDC என்ற நிறுவனம் தமிழினத்தை நரவேட்டையாடிய ராஜபக்சே க்கு தோளோடு தோள் நின்று ஆதரவளித்த இந்திய அரசு நிறுவனம்.ராஜபக்சேவின் சிங்கள வெறி அரசுக்கு மனித உரிமைகளுக்காக மறுக்கப்பட்ட சர்வதேச நிதியை(190 கோடி டாலர் நிதி) வழங்குவதற்கு ஆவன செய்த நிறுவனம்.

இநத CIDC நிறுவனத்துடன் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் போட்டுள்ளது.இந்த விபரம் CIDC நிறுவனத்தின் இணையத்தளத்தில் காணக் கிடைக்கிறது.

இத்தனைக்கும் பிறகு,செப்-5 உண்மை இதழில் தஞ்சையில் சேகரன் என்ற நேயரின் கேள்விக்கு "கனவில்கூட ஈழத் தமிழருக்கு எதிரான நிலையை எடுத்திடுமா நமது அமைப்புகள் " என்று புளுகு முட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் கடலூரார்.

அட, தஞ்சையில் சேகரன்களுக்கா? பஞ்சம்!

ஒரு ரூபாய் மதிப்புள்ள சிறிலங்கா தேனீர் பாக்கெட்டில் கூட தமிழன் இரத்தம் சொட்டுவதாக பிரச்சாரம் செய்கிறார்கள் புலம்பெயர் ஈழத்தமிழர்கள்.

அய்ரோப்பிய ஒன்றியத்தின் 100 மில்லியன் டாலர் GSP+ சலுகையை சிறிலங்காவிற்கு ரத்து செய்யக் கோரி குதறும் குளிரில் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறான் புலம் பெயர் தமிழன்.

190 கோடி டாலர் சர்வதேச நிதியை கொடியவன் ராஜபக்சே கையில் கொடுத்த நிறுவனத்துடன் கை கோர்த்து நிற்கும் வீரமணியின் கம்பெனி, இலங்கைத் திட்டத்தில் ஈடுபடாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது என A/C ரூமில் உட்கார்ந்து கயிறு திரிக்கிறார் வீரமணியார்.

பெரியாரின் உண்மையில்,தனது தலைவரின் முரசொலி பாணியிலே...கேள்வியும் கேட்டு...இப்படி அறிவாக...பதிலும் அளித்திருக்கிறார்.

இந்த உத்தமர், கட்டாரியால் குத்தி கொல்லவில்லையாம்! கட்டாரி வாங்கி கொடுத்தவனோடு கைகோர்த்து மட்டுமே நிற்கிறாராம்.

மானமுள்ள தமிழர்கள் அனைவரும் காங்கிரசை தமிழர்களின் நிரந்தர இனஎதிரியாகவே கருதி, 2009 நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்த போது திமுகவின் வேப்பேரி வட்ட செயலாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வீரமணியோ, சோனியா காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்தாரே! இதைவிட ஈழத்தமிழர்களுக்கு வேறு என்ன துரோகம் செய்து விட முடியும்?

http://erottukannadi.blogspot.com/2009/03/blog-post_13.html

அவரின் வரலாற்றுத்துரோகத்திற்கு சான்றிதழ் வழங்கும் வகையில் தானே வீரமணியின் கூடாராம் காலியாகிக் கொண்டுள்ளது.

கோவை தி.க மாவட்டத் துணைத் தலைவர் சொக்கம்பட்டி தண்டபாணி தொடங்கி மானமுள்ளத் தோழர்கள் தொடர்ந்து சான்றிதழ் வழங்கி கொண்டுள்ளனர்.

காரைக்குடி.கல்வி வள்ளல் அழகப்ப"செட்டியாரின்" நூற்றாண்டு விழா கமிட்டியார், வல்லம் கல்வி வள்ளல் வீரமணி மீதான விமர்சனம் என்றவுடன் பதறி வருகிறார்கள்.

குதர்க்கப் பார்வை என்று கண்டுபிடித்துவிட்டார் இளவரசன்.

"ஈரோட்டுக்கண்ணாடி" க்கு பொழிப்புரை வேறு!

ஈரோட்டுக்கண்ணாடி- தனிப்பட்ட யாருக்கும் கொடுக்கப்பட்ட சிறப்பு பெயரோ, பட்டம் அல்ல!



பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்ட அனைவரும் பயன்படுத்தும் அடையாளச் சொல்.



வலைப்பூவின் பெயரே,இந்த தளம் பெரியாரிஸ்ட்களுக்கானது என்பதைச் சொல்லும்.



தனது வலைத்தளத்திற்கு செல்லாத்தா...மாரியாத்தா என்று பழமை நெடி வீசும் பெயரை வைத்திருக்கும் கொள்கை குருடர்களுக்கு ஈரோட்டுக்கண்ணாடி உறுத்தத் தான் செய்யும்.



முக்கிய குறிப்பு: தமிழர்தலைவர் என்பது தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்களில் ஒன்று.

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்து நூலாக எழுதிய சாமி.சிதம்பரனார், அந்நூலுக்கு தந்த தலைப்பே தமிழர் தலைவர் என்பது தான்.

தான் ஆசிரியராக இருக்கும் விடுதலை நாளேட்டில் மட்டும் தன்னை "தமிழர் தலைவர்" என்று அச்சடித்து அழகு பார்த்துக் கொள்ளும் வீரமணியின் தொண்டர்களுக்கு ஈரோட்டுக்கண்ணாடி உறுத்தத் தான் செய்யும்.

குன்றக்குடி பல்கலைகழகத்தில் அச்சடித்து வாங்கிய சான்றிதழா?அது....

பெரியார் தொண்டர்கள் பெரிதும் மதிக்கும் கவிஞர். கலி பூங்குன்றன் அவர்கள் கூட தனது விடுதலை கட்டுரையில்,தமிழர் தலைவர் நூலைப் பற்றிக் குறிப்பிட்டு ஜாதி ஒழிப்பு ஜாம்பவானாகிய தந்தை பெரியார் அவர்கள் வாழ்க்கை வரலாற்று நூலின் தலைப்பையே அவர் கொள்கைக்கு எதிராக சிதைக்கிறார்களே என்று வெளிப்படையாக அங்கலாய்த்து,தமிழர் தலைவர் தலைப்பையே "சுட்டு" விட்டார்களே உள்ளுக்குள் தேம்புவதும் ஈரோட்டுக்கண்ணாடியின் வழியே தெரியும் நிதர்சனம்.

பெயரே அறியப்படாத சிற்றிதழில் வெளியான செய்திகளுக்கெல்லாம், வரலாற்று ஆதாரங்களோடு எழுத்துச்சாட்டை எடுக்கும் கவிஞர், பிரபல தமிழ் வார இதழான குமுதம் ரிப்போட்டர், வாரிசு நியமன பொதுக்குழுவை பற்றி தொலைபேசியில் அழைத்துக் கேட்ட போது, அன்புராஜ் தொடர்பாக நான் பேச முடியாது என்றதும் கூட அந்த தேம்பலின் தொடர்ச்சி தான். திராவிடர்கழகத்தின் பொதுசெயலாளரின் வரம்புக்கு அப்பாற்பட்டதா தலைமை நிலைய செயலாளர் பதவி? என்ற சந்தேகம் எழுகிறது.



இந்த சந்தேகத்தை திராவிடர் கழகத்தின் சட்ட திட்ட விதிகளை முழுதும் அறிந்த, நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு நடத்தும் திறனுள்ள வழக்கறிஞர்.துரைசாமியிடம் தான் கேட்டு தெளிய வேண்டும்.



தற்போது,வேப்பேரி.வீரமணி மடத்தில் வீ.அன்புராஜ் - இளையப் பட்டமாக பொறுப்பேற்றுள்ளார்.


இளையவருக்கு பெரியாரின் எந்த பட்டத்தை "சுட்டு"க் கொடுக்கப் போகிறார்களோ!