1954-
வரலாறு, தமிழர் விடுதலைக்கு வல்வெட்டித்துறை.வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் போராயுத்தத்தை தந்த நாள்.
பிரபாகரன் -மாற்றானுக்கு மண்டியிடாத மாவீரம்!
நற்குடிபிறப்பான இவனே,இவன் மட்டுமே தமிழினத்தின் தனிப்பெரும் தலைவன்!
தமிழினத்திற்கு, காலத்தின் கொடையாக கரிகாலன் கிடைத்த தினம் : நவம்பர்-26

ஆயுத குவியலோடு வந்த உலக வல்லாதிக்கங்களாலேயே நெருங்கமுடியாத மணிமுடியை, தன் மழலை சிரிப்பை மட்டுமே காட்டி தொட்டு விளையாடும் தமிழ் குழந்தை .
1957-
உலக வரலாற்றில்,எந்த நாட்டு அரசியல் சாசனமும், தன் நாட்டுமக்களை இழிமக்களாக குறிப்பிட்டதில்லை.
அறிவியக்க தலைவர் பெரியார் இந்த வினைக்கான எதிர்வினையை மிக சரியாக ஆற்றினார்.
தமிழர்களை இழிவுபடுத்தும் அரசியல் சாசனத்தை எரிக்க பெரியார் தேர்ந்தெடுத்த நாள்: நவம்பர் -26
தமிழர் விடுதலை வரலாற்றில் நவம்பர்-26 மைல்கல்!
பெரியார் தி.க சென்னை பொதுக்கூட்டம்

0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment