கடலூர்.வீரமணியின் சண்டித்தனத்திற்கு முற்றுப் புள்ளி.










மண்ணாங்கட்டியால் தடுக்க முடியாத பெருவெள்ளம் -பெரியார்!





வைக்கோல் கட்டுகளால் அணைத்துவிட முடியாத பெருநெருப்பு- பெரியார்!!



































பெரியாரும்,பெரியாரின் கொள்கைகளும்,பெரியாரியக்கமும், இன்றும் நடைபோடுவது தங்களது முகத்தையும்,பெயரையும் விளம்பரவெளிச்சத்திற்கு கொண்டுவராத,கொண்டுவர விரும்பாத பெரியார் மாணவர்களால் மட்டுமே.





பெரியாரியலை எதிரிகள் ஏகடியம் பேசவும், நம்மவர்களே, பெரியார் காலத்தில எல்லாம் சரிதாங்க, இந்த காலத்திற்கு எல்லாம் சரிப் பட்டு வராது என்று சறுக்கல்வாதம் பேசவும் யார் காரணம்?





நாளுக்கு நாள் வளர்ச்சி பெற வேண்டிய பெரியாரியக்கம் தளர்ச்சி கொள்ள யார் காரணம்?





பெரியாரின் வாரிசுகளாக, சீடர்களாக தங்களை தாங்களே- விளம்பரபடுத்தி தன் வாழ்விற்கு மட்டுமல்லாது, தங்கள் பரம்பரைக்கே வெளிச்சம் தேடிக்கொண்டிருக்கும் போலி பெரியாரிஸ்ட்களாலே!





பகுத்தறிவை பயன்படுத்தாத பக்தர்களே,போலிசாமியார்களை ஒரு கட்டத்தில் அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.





பெரியார் எழுத்துக்களை வெளியிடுவதற்கு குறுக்கே நின்ற பின்பும், போலி பெரியாரிஸ்ட் டை அடையாளம் காண கருப்பு சட்டைகாரர்களுக்கு பெரியார் தந்த புத்தி கூட தேவையில்லை. அடிப்படையான சொந்த புத்தியே போதும்.





இனி, பெரியார் தொண்டர்களுக்கு பெரியாரியியலை பரப்புவதை விட முக்கிய வேலை போலி பெரியாரிஸ்ட்களை அடையாளப்படுத்துவதே.





போலி பெரியாரிஸ்ட்களை அடையாளப்படுத்தும் கருஞ்சட்டைகளின் பணியை, கருப்பு உடையணிந்து மாண்பமை நீதியரசர்கள் இப்ராகிம் கலிஃபுல்லா, கிருபாகரன் ஆகியோரே தொடங்கி வைத்துள்ளனர்.





தந்தை பெரியாரின் குடிஅரசு நூல்களை, பெரியார் திக வெளியிடுவதற்கான தடையை 09/06/2010 அன்று வெளியிட்ட தீர்ப்பின் வழி சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தகர்த்தெரிந்துள்ளனர்.











பெரியார் வென்றிருக்கிறார்!








பெரியாரின் தொண்டர்கள் வென்றிருக்கிறார்கள்!!









பொதுநலபெரியாரை பூட்டிவைக்க நினைத்த சுயநலவாதிகளின் முகமூடி கிழிக்கபட்டிருக்கிறது.








"அதிகாரபூர்வம்" பேசிய அல்பங்களுக்கு ஆப்பு செருகப்பட்டுள்ளது.









உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பிற்கு பிறகாவது,தமிழக அரசு- பெரியார் நூல்களை நாட்டுமையாக்குமா? அல்லது அல்லக்கைகளின் "ஜால்ரா" சத்தத்திற்காக அப்படியே விட்டுவிடுமா? என்பது தெரியவில்லை.






ஆனால், பெரியாரை மக்கள் உடைமையாக்கி, பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்குவதே போலி பெரியாரிஸ்ட் டுக்கு தரும் தண்டனையாக இருக்கும்.



தொடர்புபட்ட இணைப்பு :http://erottukannadi.blogspot.com/2008/08/1935-1952-intellectual-properties.html

0 உங்கள் கருத்துக்கள்: