பெரியார், இந்தி படிக்கவிட்டிருந்தால்...புடுங்கி தள்ளியிருப்போம் !





பக்தி,மதம் என்ற போர்வையில்...பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கியிருந்த தமிழினத்தை மீட்டெடுத்தது, இன்னும் மீட்டெடுக்க போராடிக்கொண்டிருப்பது திராவிட இயக்கம்!
பார்ப்பன அடிமையாய் சொரணையற்று கிடந்தவனுக்கு, அவனது சாதீய அவமானத்தை உணர்த்திக் காட்டி....தமிழனாக அடையாளம் காட்டியதும் திராவிட இயக்கமே!!

தமிழினத்தை பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்க...சமூக மருத்துவரான பெரியாரின் சிகிச்சை முறையே கடவுள் மறுப்பு; நாத்திகம்.


இவற்றையெல்லாம் மறந்த- நன்றி கெட்ட தமிழன், பக்தி போதையினாலும் இந்திய தேசிய மயக்கத்திலும் மீண்டும் பார்ப்பன அடிமையாய் மாறி கொண்டிருக்கிறான்.

தமிழர்களின் அரசியலை ஆக்ரமித்த இந்திய தேசியம், தமிழினத்தை மொழி ரீதியாக ஒடுக்கி,மொழியடையாளத்தை முற்றாக ஒழிக்க செய்வதற்கான ஆயத்தமே "இந்தி திணிப்பு".

1938 -ல் தமிழ்நாட்டு பார்ப்பன கங்காணியாக ராஜாஜியை முன்னிறுத்தி தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இந்தியை..... ஊர்தோறும் இந்தி எதிர்ப்பு படையை உருவாக்கி போர் முழக்கம் செய்தவர் பெரியார்.

1938 - போராட்டமே, வரலாற்றில் தமிழன் தொடுத்த முதல் போர்.

பெரியார் அதை ஒரு அரசியல் போராட்டமாக நடத்தாமல், தமிழ்நாட்டு மண்ணில் இந்தி எதிர்ப்புணர்ச்சி விருட்சமாக வளர விதையாக நின்றார்.

அன்று, பெரியார் இட்ட அடித்தளம் தான் தமிழ் மண் தலை நிமிர்விற்கும், வடவர் ஆதிக்கத்திற்கு தலைவணங்கா தன்மைக்கும் காரணியாக அமைந்துள்ளது.

இன அடையாளத்தை தொலைத்து, பார்ப்பனதாசனாய் இருப்பதை பெருமையாக நினைக்கும் சோரம்போன தமிழனின் புலம்பல்களில் ஒன்று தான், திராவிட இயக்கம், இந்தி படிக்க விடாமல் தடுத்து விட்டது என்பது;

பெரியார் இந்தி படிக்க விடாமல் தடுத்துவிட்டால் தான் குடி முழ்கி போய்விட்டது. இந்தி படித்திருந்தால் புடுங்கிதள்ளியிருப்போம் என்பது தான் இந்த மண்டைவீங்கிகளின் வாதம்.

இந்த அரைவேக்காடு மடையர்கள், தங்கள் புலம்பலை நியாயப்படுத்த கையில் துக்ளகோடு தான் பேசுவார்கள்.

படிப்பறிவிலும் சமூக ரீதியிலும் மிகவும் பிற்பட்ட பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42.1 கோடி மிகக் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை உலகின் மிக ஏழ்மையான கண்டமான ஆப்பிரிக்காவில் உள்ள மிக மிக ஏழ்மையான 26 நாடுகளில் வசிக்கும் மிக ஏழ்மையான மக்களின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகையை விட அதிகமாகும். இந்த நாடுகளில் மிகக் கடுமையான ஏழ்மையில் உள்ளோர் எண்ணிக்கை 41 கோடியாகும்.


இந்த உண்மை நிலையினை சொல்வது - ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறையும் ஆக்ஸ்போர்ட் மனிதவளத்துறையும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலே மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் தான் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

கல்வி தொடங்கி...கக்கூஸ் வரைக்கும் கடவுளை கண்டுபிடித்து வைத்திருக்கும் பாரத புண்ணிய பூமியின் நிலை இது தான்!

உள்ளங்கையிலிருந்தே, தங்ககாசுகளாககொட்டும் லெட்சுமி கண்டுபிடித்த நாட்டில் 42.1 கோடி பேர் சோத்துக்கு வழியில்லாமல் சிங்கியடிக்கிறார்கள்.

இதை "புண்ணியபூமி" என்று புளுகி திரியும் ராமகோபாலய்யருக்கு மானமிருந்தால் நாக்கை புடுங்கி கொண்டு சாகலாம்.
அது "அவாளுக்கே" கிடையாது ; எதிர்பார்க்கவும் முடியாது.


வறுமை கோரத் தாண்டவமாடும் பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இந்தி பேசும் மாநிலங்களே. மேற்கு வங்கம் தவிர மற்ற மாநில மக்களின் தாய்மொழியே பாழாய் போன இந்தி தான்.

துக்ளக் படித்து அறிவுசீவியான தமிழர்களே, இந்தியை தாய்மொழியாக கொண்ட வட மாநிலத்தை ஒப்பிடுகையில் இந்தி சனியனை அடித்து விரட்டிய
தமிழ்நாடே மேல் அல்லவா?

இனி மேலும் சொல்வீர்களா ? பெரியார், இந்தி படிக்கவிட்டிருந்தால்...புடுங்கி தள்ளியிருப்போம் ! என்று.........

2 உங்கள் கருத்துக்கள்:

ஆட்டையாம்பட்டி அம்பி said...

ஹிந்தி படிச்சால் வேலை கிடைக்கும்! எங்கே? வேற எங்கே! தமிழ் நாட்டிலதான்!!

please see this!

http://tamilkadu.blogspot.com/

http://tamilkadu.blogspot.com/2010/05/blog-post_20.html

கோவி.கண்ணன் said...

//துக்ளக் படித்து அறிவுசீவியான தமிழர்களே, இந்தியை தாய்மொழியாக கொண்ட வட மாநிலத்தை ஒப்பிடுகையில் இந்தி சனியனை அடித்து விரட்டிய
தமிழ்நாடே மேல் அல்லவா? //

:)

அருமை