கரகாட்டகாரன் வாழைப்பழ காமெடிக்கு பிறகு, தமிழக மக்கள் அதிகம் ரசித்து,ரசித்து...சிரித்த நகைச்சுவை

பொழுதுபோக்கிற்கு கூட "அழுவாச்சி"சீரியல் பார்த்து கண்ணீர்துளிகளை கொட்டி, கண்ணீர்த்துளிகளிடம் காசை கொட்டச் செய்வது தமிழக மக்களில் பெரும்பான்மையினர்.

பொழுதுபோக்கில் கூட நம்மைப் போன்றோர் சிறுபான்மை.

கவுண்டமணி-செந்தில்,விவேக்,வடிவேலு, சந்தானம் காமெடி, அசத்தப்போவது/கலக்கப்போவது யாரு?,லொள்ளுசபா, மீண்டும்மீண்டும் சிரிப்பு எல்லாம் பார்த்து சலித்துப்போன நமக்கு ஒரே ஆறுதல் விடுதலை பேப்பரும்,அதன் ஆசிரியர் கடலூர்.வீரமணியும் தான்!

கடந்த ஜீன் 9 ந்தேதி, பெரியார் தி.க குடிஅரசை வெளியிட தடை நீக்கி, வீரமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திராவிடர் கழக 'தல' யாக இருந்த வீரமணி கெட்டப் மாத்தி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக அறிக்கை விட்டார். (10/06/2010- விடுதலை)

அப்படி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளராகவே, அந்த "Character" வே வாழ்ந்துட்டார்.

2 ஆண்டுகள் வழக்கு நடத்தி,தோற்றப் பிறகு " அனுமதி பெற்று பெரியார் எழுத்தை, பேச்சை வெளியிடத் தடை எப்போதும் கிடையாதே! " என்கிறார்.

ஆனா, அந்த அனுமதிக்கு இவருக்கு 15 லட்சம் தண்டம் கட்டனுமாம்.

அம்பேத்காரை எல்லாம் இழுத்து, அடைப்புக்குறிக்குள் இங்கிலீஸ் எல்லாம் எழுதி பிச்சு உதறிட்டாரு இந்த MA BL,

தீர்ப்பு சொல்லிய பிறகும், பிரதான வழக்கை விசாரிக்கவே இல்லை என்று அடம் பிடிக்கிறார்.

15 லட்சத்தை அவரால மறக்க முடியல.

நல்லவேளை! பிரதான வழக்கை விசாரித்து, 15 லட்சம் தருவாங்க என்று நினைத்து வீரமணியும்,அன்புராஜீம் துண்டை விரித்து அய்க்கோர்ட்டு வராண்டாவிலே தூங்கி காமெடி பண்ணாமல் 27 லட்ச ரூபாய் காரில் வீட்டுக்கு போனது நமக்கெல்லாம் ஆறுதலான விஷயம்.

ஜீலை 2 ந் தேதி, அவரது 27 லட்ச ரூபாய் காரின் கண்ணாடி உடைந்துவிட்டதால், திராவிடர் கழகத் தலைவராக கெட்டப் போட்டு செம அறிக்கை வெளியிட்டார் கடலூரார். (03/07/2010 -விடுதலை)

கரகாட்டகாரன் வாழைப்பழ காமெடிக்கு பிறகு, தமிழக மக்கள் அதிகம் ரசித்து,ரசித்து...சிரித்த நகைச்சுவை இதுவாக தான் இருக்கும்.

கழகத் தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம். சட்டம், அதன் கடமையைச் செய்யும் என்ற முழு நம்பிக்கை நமக்கு உண்டு. ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஆத்திரப்பட்டு இறங்கிவிடக் கூடாது.

முதிய இளைஞர்களையே(95, 98 வயது ஆனவர்கள்), தொண்டர்களாக கொண்ட தி.க தலைவரின் அறிக்கையை பெரியார் தி.க ஏடான பெரியார் முழக்கம் "சுவை" கருதி வெளியிட்டு மகிழ்ந்தது.

அன்று முழுவதும், விடுதலை அலுவலகத்தில் ஊழியர்கள் எதற்கோ சிரித்திருந்தாலும், நம்மள வைத்து தான் காமெடி,கீமெடி பண்றாங்களோ என்று நினைத்து அவரும் சிரித்திருப்பார்.

கலைஞர் அரசினைக் காக்க வேண்டியதே வீரமணியின் முதற்கடமையாம்! அய்யாவின் பணி முடிப்பது அவரது லிஸ்டில் எத்தனையாவது கடமை என்று மேலாளர்.சீதாராமனை தான் கேட்க வேண்டும்.

துள்ளும் துரோகத்தின் முதுகெலும்பு தூள் தூளாகும் என அவரது அறிக்கையினால்(13-ஜீலை-2010-விடுத்லை) வீரமணிக்குள் இத்தனை நாள் தூங்கிக் கொண்டிருந்த மிருகம் முழித்துக் கொண்டதோ என தமிழ்நாடே டரியல் ஆகிவிட்டது.


பெரியார் சொத்துக்களை பெரியார் தி.க மீட்கப் போவது ஒரு புரூடா மிரட்டல் என்று முறைப்பாக அறிக்கை விட்டாலும், உள்ளுக்குள் உதறல் தான்!

அதனால் தான்........

குடிஅரசு தொகுதிகள் 1933 ஆம் ஆண்டுவரைக்கும் உரியவை வெளியிடப்பட்டுள்ளன;(பெரியார் தி.க 1938 வரை வெளியிட்டது)

காலவரிசைப்படி பெரியார் களஞ்சியம் 32 தொகுதிகள் கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி _ தீண்டாமை என்கிற தலைப்புகளில் வெளிவந்து நாடு தழுவிய அளவில் பரப்பப் பட்டுள்ளன!

ஞானசூரியன், இராமாயண ஆராய்ச்சி, பாரத ஆராய்ச்சி, கீதையின் மறுபக்கம், புராணங்கள், மதவெறி அமைப்புகள் பற்றிய ஆதாரபூர்வ விளக்கம் _ சமூகநீதி, வகுப்புவாரி உரிமை; கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் தொடங்கி வாழ்வியல் சிந்தனைகள் வரை பல்வேறு துறை-களின் கலங்கரை விளக்கமாக _ பல்லாயிரக்-கணக்கில் பரப்பப் பட்டு வருகின்றன.

பெரியார் மய்யம் புதுடில்லி தலைநகரில்; அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரியார் பன்னாட்டு அமைப்பு, வடபுலங்களில் _ தென்புலங்களில் நமது கொள்கை வீச்சு-கள். இவை தவிர பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்கள்மூலம் ஆராய்ச்சிகள் _ கருத்தரங்குகள், இப்படி கனடாவரை எங்கெங்கும் பெரியார் பிரபலப்பட்டுள்ளார்கள்
!


என்று பெரியார் தி.க கேட்காமலே வெள்ளை அறிக்கை விடுகிறார் இந்த வீரமணி.

வீரமணியின் body strong தான் ; basement கொஞ்சம் weak என்பது திராவிடர் கழகத்தின் சட்டதிட்டங்களை நன்கறிந்த வழக்கறிஞர்.துரைசாமி அவர்களுக்கு தெரியும்.

2006 ஆம் ஆண்டில் திருச்சி.திருவரங்கத்தில் திராவிடர் கழகத்தால் அமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை இந்து வெறியர்களால் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் திக வினர், அந்நிகழ்விற்கான எதிர்வினையை பார்ப்பன கேந்திரங்களில் நிகழ்த்தி காட்டினர்.

தமிழினத்தை இழிவுபடுத்தும் பூணூலை அறுத்து, தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறை ஏகினர்.

பெரியார் மண்ணில்,பெரியார் தத்துவமாகவே எழுந்து நிற்கும் பெரியார் சிலைகளின் மீதான இந்து மத வெறியர்களின் வன்முறை வெறியாட்டத்திற்கு, பதிலாக திக வினரை அமைதி காக்க அறிவுறுத்தினார்.


பெரியார் சொத்து தன்னிடமிருந்து பறி போய்விடுமோ என்ற பதற்றத்தில், திக வினரை தற்கொலைப் பட்டாளங்களாக மாறச் சொல்கிறார் மானமிகு.

பெரியார் சொத்தென்றால் வாயை திற.
பெரியார் தத்துவம் என்றால் வாயை மூடு.
இது தான் கடலூராரின் அறிவு நாணய லட்சணம்.



ஜூலை 2 ஆம் தேதி,அவரது 27 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது பார்ப்பனர் மற்றும் துரோகிகளின் கூட்டுசதி- சொலவது வீரமணி.

தடை தகர்த்து வந்த அய்யாவின் குடிஅரசு நூல்களை வெளியிட்டு,பேசிய அடுத்த நாளே பெரியார் பெருந்தொண்டர்.திருவாரூர்.தங்கராசு அவர்கள் வீட்டின் மீது நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தின் சூத்திரதாரி யார்? அது யாருடைய கூட்டு சதி?

வீரமணி,போயஸ் தோட்டத்திற்கு தோப்புகரணம் போட்டதால், திக வை விட்டு வெளியேறியவர்களும்,வெளியேற்றப்பட்டவர்களும் துரோகிகள் என்றால் பார்ப்பன கூட்டு வைத்தது யார்? என்பதை தமிழ்நாடே அறியும்.

தமிழ்நாடரசின் டான்சி நிலத்தை தனக்காக வாங்கிய ஜெயலலிதா, நூல் வெளியீட்டு விழாவில் புத்தகத்தை வாங்கி கொண்டு பணம் கொடுத்ததற்காக, பாப்பாத்தியிடம் பெரியாரை பார்க்கிறேன் என்று சடகோபம் சாத்தி,பாப்பாத்தி ஜெ. க்கு ஆலவட்டம் வீசியது யார்?

வீரப்பன் காட்டில் பெய்த மழையில் நனைந்தவர்கள் கனவுலகில் இப்போது ஆட்டம் போடுகின்றனர்களாம்.......
பெரியாரியல் கொழுப்பும், கருப்புச்சட்டைக்காரன் என்ற திமிரும் ஆட்டம் போட தான் வைக்கும்.

மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை.
கல்லூரியா? நிகர்நிலையா? எதுவும் கிடையாது.
அப்புறமென்ன...ஆட்டம் தான்!

மேல்மருவத்தூர் வரை வந்த சிபிஅய், வல்லத்திற்கு வராதிருக்க எத்தனை சிங்கி? எத்தனை ஜால்ரா?

செவ்வாடையை பற்றிய சிபிஅய், கருப்பா(ட்)டை விட்டது எப்படி?

வீரமணி, இவ்வளவு சரியாக சொல்வதை பார்க்கும் போது மழையில் நனைந்தவர்களுக்கு, இவரா வந்து குடை பிடித்தார்? என்ற சந்தேகம்

சே, இருக்காது.
நனைகிறவர்கள் முதலமைச்சராக இருந்தால் தான்...குடையும் பிடிப்பார்; கூஜாவும்தூக்குவார் என்பது 'நிகர்நிலை' அறிந்த உண்மை.

எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், நமது முன்னாள் "ஆசிரியருக்கு" அன்பான வேண்டுகோள் ஒன்றும் நம்மிடம் இருக்கிறது.

கழகம்,டிரஸ்ட்,கல்லூரி எல்லாம் MNC மாதிரி தான்! CEO வா ஆக்ட் பண்ணி சக்சஸ் பண்ணலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்
நம்ம அன்பு raj தம்பி;

நீங்களோ, தற்கொலைப் பட்டாளங்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க களங்களைச் சந்திக்க கடமை வீரர்களின் பட்டாளங்கள் காத்திருக்கின்றன என்றெல்லாம் எழுதி பீதிய கெளப்பினா, பொத்தி,பொத்தி செல்லமா வளர்த்த பிள்ளை மிரண்டுட போகுது.

பார்த்து, பக்குவமா....உங்க திறமை எல்லாம் Knowledge Transfer session -அய் Contact பண்ணி சொல்லி கொடுங்க.


9 வயதில், அரை டிராயர் போட்ட காலத்திலிருந்து, தந்தை பெரியார்,தந்தை பெரியார் என்றே சுற்றி திரிந்ததற்கு இது தான் மிச்சம்.

0 உங்கள் கருத்துக்கள்: